Description
-கோவிந்தன்
15பெப்ரவரி 1985 இல், நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இனிமேலும் தொடர்ந்தும் இருப்பதில் அர்த்தமில்லை எனக் கண்ட பின்பு, அதிலிருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அந்த அமைப்பில் நிலவிய அராஜகம், ஜனநாயகமின்மை என்பன அவர்கள் நடாத்தும் போராட்டம் கூட, இன்னொரு அராஜகத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் காரணமாக அமைந்துவிடும் என்று கருதியதாலேயே நாம் அந்த அமைப்பில் இருந்து வெளியேறினோம்.
எமது வெளியேற்றத்தினை அந்த அராஜகவாதிகள் அங்கீகரிக்கவில்லை. நாம் வெளியேறிய போது எம்மைக் கொன்றொழிப்பதற்காக, சென்னை நகரமெங்கும் எம்மை சல்லடை போட்டுத் தேடினார்கள். நாம் எம்மை பாதுகாத்துக் கொண்டு இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அக்காலத்திலேயே இந்த நாவல் எழுதப்பட்டது.




Reviews
There are no reviews yet.