Description
-பாலகுமாரன்.
சென்னையும் அதன் சுற்றுப்புறமும் பத்து மணிக்கு அடங்கிவிடுகின்றன. பதினொன்றுக்கு ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிடுகின்றன. பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்கு ஊர் சின்ன பரபரப்புக் காட்டும் புரண்டு படுத்துத் தோளைச் சொறிந்து எழுந்து ஒரு முடக்கு தண்ணீர் குடிக்கிற மாதிரி இரவுக் காட்சி சினிமா முடிந்த பிறகு கொஞ்சம் முனகும். இரண்டு மணிக்கு உலுக்கினாலும் எழுப்பாத தூக்கம்.
பம்பாய் இரண்டு மணிக்குத்தான் தூங்கவே போகுமாம். பத்து மணிக்கு ஜே ஜே என்று இருக்குமாம். பன்னிரண்டு மணிக்கு ஒரே சிரிப்பும் கும்மாளமும் தானாம்.





Reviews
There are no reviews yet.