Description
ஐம்பதாண்டுகளுக்கும் மேலான கவிதை வாழ்வும், எழுத்தும் சேரனுடையது. அவரது கவிதையியல் குறித்து வெவ்வேறு காலங்களில் தமிழிலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் முன்வைக்கப்பட்டவற்றின் தொகுப்பு இந்த நூல்
கா.சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, ஸாஷா ஈபெலிங்க், சோ. பத்மநாதன், சி.சிவசேகரம், ரவிக்குமார், செல்வா கனகநாயகம், மண்குதிரை, ஜிஃப்ரி ஹாசன், கீதா சுகுமாரன், ஜெயமோகன், அ.ராமசாமி, சுயாந்தன், குணாளினி தயாநந்தன், பெருந்தேவி, கருணாகரன். பொ.திராவிடமணி, த.அஜந்தகுமார், கே.சச்சிதானந்தன், சா. கந்தசாமி, அருந்ததி, இமையாள், அனுசியா ராமசாமி, க.நவம், யுவன் சந்திரசேகர், நாகார்ஜுனன் ஆகிய இருபத்தாறு ஆளுமைகளின் எழுத்துகளுடன், கவிஞர் சேரனுடன் அபர்ணா ஹல்பே நடத்திய உரையாடலையும் உள்ளடக்கமாகக் கொண்டது.
மேற்குலகின் கல்வித்தளம் சார்ந்தவர்களும், அவர்களுடைய இலக்கியப் பகுப்பாய்வுகளுடனும், தமிழ், மலையாள இலக்கியப் பதிவுகள்,விமர்சனம் சார்ந்த துறைகளைக் கொண்டவர்களினதும் எழுத்துக்களால் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், தமிழில் முன்னோடியான பங்களிப்பாகும்.





Reviews
There are no reviews yet.