Description
உமாமகேஸ்வரி.
உணர்தலின் நிகழ்கின்ற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள்.
ஆனால் அது அதிசயம் அல்ல யதார்த்தம்…..
பொய்களும், நிஜங்களும்
கலந்து குழம்பும்
உறவுகளின் குடுவை
நிரம்பி வழிய,
உதாசீனமாய் ஆடுகின்றன
பிரபஞ்சத்தின் மாபெரும் பாதங்கள்.
கைதவறி உடைந்த
கண்ணாடிக் கிண்ணத்தின்
சில்லுகள்
சிதறிப் பறக்கின்றன
நான்
துடைத்துத் தூய்மைப் படுத்த முடியாத
சிக்கலின் வெளி நோக்கி.




Reviews
There are no reviews yet.