Description
“வெல்லிங்டன்” யதார்த்த நாவல் வகையைச் சார்ந்தது.பலரும் தங்கள் முதல் நாவலை சுயவாழ்வையும் சுயஅனுபவத்தையும் பின்னணியாக கொண்டு எழுதியிருப்பது போலவே சுகுமாரனும் இந்நாவலை படைத்தளித்துள்ளார். ”வெல்லிங்டன்” என்னும் ராணுவ பயிற்சி மையம் இந்நாவலுக்கு மையமாக இருந்தாலும் அதிலிருந்து கிளை பிரிந்து சென்று அங்கு வாழும் மனிதர்களை பற்றியே இந்நாவல் அக்கறையுடன் பேசுகிறது. இந்நாவலுக்குள் ஆசிரியரின் குரலையோ தலையீட்டையோ எங்கும் உணர முடிய வில்லை.ஒரு சிறுவனின்(பாபு) கண்வழி செவிவழி விரியும் இந்நாவலில், ’உதகமண்டலத்தின் கண்டுபிடிப்பாளனாகிய’ ஜான் சல்லிவானைப் போலவே அச்சிறுவனும் புதிய இடங்களை நோக்கிச் செல்வது நுட்பமாக நாவலுக்குள் உணர்த்தப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.