Description
ஆன்மிகப் புரட்சியாளராய் விளங்கும் அருட்பிரகாச வள்ளலார் இம்மண்ணில் வருவிக்கவுற்று 200 ஆண்டுகள் ஆகின்றது. சாதி, சமயம், மதம் என எல்லாவற்றையும் கடந்து நின்ற வள்ளலார் தமிழையும், தமிழினத்தையும் துறந்தாரில்லை. தமிழ்நாட்டில் தன்னைப் பிறப்பித்தமைக்காகவும், தமிழ்மொழியிலே கவிபாட வைத்தமைக்காகவும் பலவாறு எண்ணி எண்ணி இறைவனிடத்தில் மகிழ்ந்தவர். வள்ளலாரின் சீவகாருண்யம், சன்மார்க்கம், அறிவியல் சிந்தனை, மருத்துவக் குறிப்பு, மெய்யியல், என்பதான பல கோணங்களின் செய்திகள் இத்தமிழ்ச் சமூகத்தைச் சென்றடைந்திருந்தாலும், பிரபலப்பட்டிருந்தாலும் வள்ளலாரின் தமிழறிவுச் செறிவும், தமிழ்ப் பணியும் பெருவாரியான மக்களைச் சென்றடையவில்லை எனும் ஏக்கத்தினை தீர்க்கும் முயற்சியாக இந்நூல் அமைந்திருக்கிறது.
Author: தாமல் கோ.சரவணன்
Publisher: வானவில் புத்தகாலயம்
No. of pages: 144
Other Specifications
Language: தமிழ்
Published on: 2024
Book Format: Paperback
Reviews
There are no reviews yet.