Description
ஆஸ்திரியாவில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராக இருந்து 1951இல் மறைந்த இருபதாம் நூற்றாண்டின் பிரதான மெய்யியலாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் லுட்விக் விற்கன்ஸ்ரைனைப் பற்றித் தமிழில் வரும் முதல் நூல் இது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித சிந்தனையில் உறைந்து போயிருக்கும் கருத்து வடிவங்களின் பீடிப்பினால் மெய்யியலில் தொடர்ந்தெழும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை தர உழைத்த சளையா வைத்தியர் விற்கன்ஸ்ரைன் எனின் மிகையாகாது. அவர் மெய்யியலாளரின் மெய்யியலாளர். எட்டநின்று யோசித்துக் குழம்புபவர்களைக் கிட்ட வந்து சுற்றிப்பார்க்க அழைத்தவர்.
Reviews
There are no reviews yet.