Description
-சுப்பிரமணியம் லோகநாதன்.
முதுமை ஓய்வின் காலம், பெற்றோரையோ, வயதானவர்களையோ பராமரிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. வீடுகளிலும், வீதிகளிலும், விடுதிகளிலும் தனித்து விடப்பட்டிருக்கும் முதியவர்கள் அனைவரும் பரிதாபத்திற்கோ, அவமானத்திற்கோ உரியவர்கள் அல்லர். அவர்கள் அன்புடன், இரக்கத்துடன், பெருந்தன்மையுடன் அணுக வேண்டியவர்கள். பணத்தினால் நிரப்பி விட முடியாத வேதனையும், உறவுத் தேவைகளின் எதிர்பார்ப்பும் அவர்களது சுருக்கம் விழுந்த முகத்தில் தேங்கி நிற்கின்றன. அவர்களை அன்புடன் அரவணைப்பதே மனித நேயத்தின் உயரிய பண்பாகும்.


Reviews
There are no reviews yet.