Description
இது சுய அனுபவங்களை கொண்டு எழுதப்பட்ட நூல் என்பது மிக முக்கியமானது. புனைவு இலக்கியம் அல்ல. வாழ்க்கையில் நாம் கடந்து சென்ற சுய அனுபவங்களை எழுதுவது என்பது அவளவு இலகுவானதல்ல. அது ஒருவகை சித்திரவதை போன்றது. அதேநேரம் சுயதிருப்தியையும் சேர்த்தே தருவது. Time Travel போல அதாவது கடந்த காலத்துக்கு திரும்பிச் சென்று அங்கிருந்து தொடங்க வேண்டும். எல்லாம் காட்சிகளாக நம்முன் மீளவும் விரியத் தொடங்கும். அந்த சம்பவங்களின்போது அன்று அனுபவித்த வேதனைக்குள் மீண்டும் போய்வர வேண்டியிருக்கும். இது உளவியல் ரீதியில் பாதிப்பாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக்கூட அதிகரிக்க வைக்கும். கண்ணீரை வரவைக்கும். உளம் இருண்டு போய்விடும். அதை எழுதி முடிப்பது என்பது ஒரு பிரசவ வலி போன்றது. இந்த நூலின் ஆசிரியர் மைதிலி அவர்களுக்கும் இவை ஏற்பட்டிருக்கும். இந்த பிரசவம் சமூகத்துக்கான ஒரு நூலை தந்திருப்பதில் அவர் திருப்தி அடையலாம். அதேபோல் அவருக்கும் ஒரு உளவள சுய சிகிச்சையாகவும் அமையலாம்.
Reviews
There are no reviews yet.