Description

இதன் பெயரும் கொலை 1997-98 ஆம் ஆண்டு வாக்கில் குமுதம் இதழில் தொடராக வந்த  சைக்கோபாத் கொலைகாரன் பற்றிய துப்பறியும் நாவல்.  இதில் வாத்தியார் கூடுதல்  சோமாறி போன்ற கலைச் சொற்களை வசந்த் வாயால் அறிமுகம் செய்திருந்தார்.

வஸந்த் இணைந்து துப்பறிந்த   நாவல். இதில் ஒரு முக்கியமான விஷயம் கணேஷுக்கு[40+] மிகவும் வயதாகிக்கொண்டே போவதை உணர்ந்த வாத்தியார் இன்ஸ்பெக்டர் இன்பா[இன்பானந்தி] என்னும் அழகிய ஐபிஎஸ் ஆஃபிஸருக்கும் கணேஷுக்கும் காதல் மலர்ந்து திருமணப் பேச்சில் முடிவது வரை சுவையாக எழுதியிருந்தார்,இது இந்த ஜோடி துப்பறிந்த 25ஆம் நாவலாம்.

வசந்த் அநியாயத்துக்கு அந்த ஐபிஎஸ் அதிகாரி இன்பாவிடம் வம்பிழுப்பார்,அக்கிரமத்துக்கு வர்ணிப்பார்.அவரே தன் எஜமானன் கணேஷின் காதலுக்கு ரூட்டும் போட்டு கொடுப்பார்.அதன் பின்னர் திருமணம் ஆனதா?என்பதை அடுத்த நாவலை வாசித்த வாத்தியாரின்  டைஹார்ட் ரசிகர்கள் தெளிவு படுத்தவும்.இக்கதையை வாசிக்கையில்  சைலன்ஸ் ஆஃப் த லாம்ப் [1991] என்னும் படம் நினைவுக்கு வந்தது,வாத்தியார் அப்படத்தைக் கூட நாவலில் அடுத்தடுத்து நிகழும் கோல்ட் பளட் கொலைகளுக்கு உந்துதலாகக் கொண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இதன் பெயரும் கொலை”

Your email address will not be published. Required fields are marked *