Description

ஃபீஹி மா ஃபீஹி’ என்பது மெளலானா ரூமியின் மிகப் பிரபலமான உரைநடை நூல். அவர் தன் சீடர்களிடம் பேசிய 71 உரைகளின் தொகுப்பு. சில உரைகள் பல பக்கங்கள் நீளும் அளவுக்குப் பெரியவை. சில உரைகள் ஒரே பத்தியில் முடிந்துவிடும் அளவுக்குச் சிறியவை. ஆனால், ஞானத்தால் எல்லா உரைகளும் விலைமதிப்பற்ற முத்துகள். ரூமி இந்த உரைகளை நிகழ்த்தியபோது அவருடைய மகன் சுல்தான் வலது, சீடர்கள் சிலரின் உதவியுடன் அவற்றை எழுதிவைத்தார் என்று சொல்லப்படுகிறது. ரூமியின் மாபெரும் ஞானக் காவியமான மஸ்னவீயைப் புரிந்துகொள்ள இந்த உரைகள் பேருதவி புரியும் என்று ஸூஃபி அறிஞர்கள் கருதுகின்றனர்.

‘ஸூஃபித்துவக் காதலின் நாவு’ என்று போற்றப்படுபவர் மெளலானா ரூமி. இறைக் காதலை அவர் பேசியிருப்பதுபோல் ஆழமாகவும் அகலமாகவும் வேறு ஒருவரும் வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை, வெறும் புகழ்ச்சி அல்ல. இறை ஞானத்தின் விழிப்பிலிருந்து இறைக் காதலைப் பேசியவர் அவர். அவரின் கவிதைகளில் காணப்படும் காதல் மயக்கம் உண்மையில் இறை ஞானத்தின் உச்சமான விழிப்பே என்பதை இந்த நூலை வாசிப்போர் அறியலாம்.

Author: ஜலாலுத்தீன் ரூமி
Translator: ரமீஸ் பிலாலி
Publisher: சீர்மை
No. of pages: 530

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஃபீஹி மா ஃபீஹி: ரூமியின் ஞானப் பேருரைகள்”

Your email address will not be published. Required fields are marked *