Availability: In Stock

பத்துலட்சம் காலடிகள் சிறுகதை-ஜெயமோகன்

Original price was: £10.00.Current price is: £9.25.

Category:

Description

ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.”

“ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார்.

“இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி எடுத்த தூய்மையான நாட்டுச்சாராயத்தை அருந்தி ஆன்மிக மேன்மையை அடைவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன், அல்லேலூயா!”

அவன் கண்ணாடிக்கோப்பையை தூக்கியதும் மற்றவர்கள் “ஆமேன்!” என்றபடி தாங்களும் தூக்கினார்கள்.

“ஈஸோமிஸிஹாய்க்கு ஸ்துதி!” என்று ஔசேப்பச்சன் பெருமூச்சுவிட்டான். “நல்ல சாராயம், அவறாச்சன் நல்ல விசுவாசியான மார்த்தோமா கிறிஸ்தவன். முன்பு புனித தோமாஸ்லீகா கொச்சி மரைன் டிரைவில் பைபிளுடனும் சிலுவையுடனும் வந்து இறங்கியபோது…”

ஸ்ரீதரன் “மார்க்ஸிஸ்டுகள் போய் அட்டிமறிக்கான கூலியை வாங்கியிருப்பார்களே!” என்றான்.

“சேச்சே அவர் கொண்டுவந்தது சிறிய சிலுவை. அவர் அதை தன் கழுத்தில் மாட்டியிருந்தார்”. என்றான் ஔசேப்பச்சன் “அதை இந்த அவறாச்சனின் மூதாதையான ஒருவர் பார்த்து அது என்ன என்று கேட்டிருக்கிறார். அவறாச்சனின் தந்தையின் தந்தை கழுத்தில் முருக்குமரத்தில் செதுக்கிய ஒரு குச்சி தொங்கியது. அது குளிகன் என்ற தெய்வத்திற்கு உரியது. கொந்தை என்று சொல்வார்கள். குளிகன் சாராயத்தின் தெய்வம். உள்ளூரில் வாற்றுசாராயம் காய்ச்சுபவர்கள் சாராயம் திரியாமல் சரியாக முறுகி வரும் பொருட்டு அணிவது. அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஆலாலோகுளிகா என்று கூவியபடி கிண்டினால்தான் ஊறல் மனம்கனிந்து சாராயத்தை வெளிவிடத்தொடங்கும். மகனே பாண்டித்தமிழ் எழுத்தாளா, இந்த சாராயம் என்பது என்ன? அது ஒரு தெய்வம்… எல்லா தெய்வங்களும் சாக்கடைபோன்ற கலீஜில் இருந்து எழுபவை…. உங்கள் விஷ்ணுகூட திரிந்த பாலில் இருந்துதானே வந்தார்?”

நான் அதை லாகவமாக கடந்து “தோமாஸ்லீகா என்ன சொன்னார்?” என்றேன்.

“தான் அணிந்திருப்பது சீமைக்கொந்தை என்று தோமாஸ்லீகா சொன்னார். அதை அணிந்துகொண்டு காய்ச்சினால் சாராயத்தில் திராட்சைப் பழத்தின் மணம் வரும் என்று சொல்லி தன் கையிலிருந்த குப்பியை முகர்ந்துபார்க்கச் சொன்னார். அதை முகர்ந்து பார்த்த அவறாச்சனின் மூதாதை மெய்ஞான அனுபூதியை அக்கணமே அடைந்து உடனே அந்த சீமைக்கொந்தையை மாட்டிக்கொண்டார். இவ்வாறாக மார்த்தோமா மதம் என்ற தூய்மையான மதம் இங்கே கால்கோள் கொண்டது” என்றான் ஔசேப்பச்சன் “ஆகவேதான் நாங்கள் எங்கள் மதத்தை ஸ்பிரிச்சுவல் என்கிறோம்.”

நான் “மட்டாஞ்சேரியில் தானே தாமஸ் வந்தார்?” என்றேன்.

“அது வேறு வரலாற்றுநூலில் உள்ளது. வரலாறு வளரும்போது வரலாற்றுநூல்களும் வளர்கின்றன. நமது புண்ணியபா

Reviews

There are no reviews yet.

Be the first to review “பத்துலட்சம் காலடிகள் சிறுகதை-ஜெயமோகன்”

Your email address will not be published. Required fields are marked *