Description
உரையாசிரியர் – வ.த. இராமசுப்ரமணியம்
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்தும் உருகார்’ என மேலோர்கள் சாற்றுவர். இத்தன்மையில் திருவாசகம் சிறந்த பத்தி நூலாக விளங்கி வருகிறது. எளிமையும் இனிமையும் உடைய அருள் தேய்ந்த பாடல்கள் உள்ளத்தை உருகச் செய்வதோடு மக்களைப் புண்ணியப் பேற்றில் ஆழ்த்தும். எல்லாச் சைவர்களும் இந்நூலை ஓதி மகிழ்கின்றார்கள். மேலைநாட்டு அறிஞரான ஜி.யு. போப் அவர்கள் திருவாசகத்தில் மிகவும் தோய்ந்து ஆட்பட்டு இன்புற்றதை உலகு அறியும். இத்தகைய அருள் நூலுக்கு உரை அமைப்பது சூரியனை அகல் விளக்குக்கொண்டு காட்டுவதை ஒக்கும். ஆயினும் இக்காலத்தில் அருட்பாடல்கள் பலவற்றுக்கும் உரை வழங்கி மேலோர்கள் வழிவகுத்த அடிப்படையில் இந்நூலுக்கு இவ்வுரை அமையலாயிற்று.





Reviews
There are no reviews yet.